திருந்திய நெல் சாகுபடி: நாற்றங்கால் தயார் செய்வது எப்படி?

திருந்திய நெல் சாகுபடி: நாற்றங்கால் தயார் செய்வது எப்படி?

நெல் சாகுபடியில் ஏக்கருக்கு சராசரியாக 4,000 முதல் 4,800 கிலோ வரை          மகசூல் கிடைக்கும் திருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறைக்கு தேவையான இளம் நாற்றுக்களை தயார் செய்வது குறித்து

பேராவூரணி: நெல் சாகுபடியில் ஏக்கருக்கு சராசரியாக 4,000 முதல் 4,800 கிலோ வரை          மகசூல் கிடைக்கும் திருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறைக்கு தேவையான இளம் நாற்றுக்களை தயார் செய்வது குறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன்அளித்துள்ள ஆலோசனைகள்: 
14 நாள்களில் வாளிப்பான நாற்றுக்களை பெற திருத்தியமைக்கப்பட்ட         பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்த வேண்டும். இதற்கு நல்ல வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்திற்கு அருகாமையில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான 3 கிலோ விதையை 40 சதுர மீட்டர் பரப்பில் நாற்றங்கால் விதைக்க வேண்டும். முன்னதாக 1 மீட்டர் அகலம், 40 மீட்டர் வரை நீளம், 5 செ.மீ உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.      பாத்தியின் மேல் 300 கேஜ் கனமுள்ள வெள்னை அல்லது கருப்பு பாலித்தீன் விரிப்பு அல்லது பாலித்தீன் உரச் சாக்குகளை விரிக்க வேண்டும். நீளம் மற்றும் அகலவாக்கில் 4 கட்டங்களாக தடுக்கப்பட்டு 1 மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம், 4 செ.மீ உயரம் கொண்ட மரத்திலான விதைப்புச் சட்டம் தயார் செய்து அதனை பாலித்தீன் விரிப்புக்கு மேல் சரியாக சமன் படவைக்க வேண்டும். ஒரு கிலோ வளமான வயல் மண்ணுடன்     நன்கு பொடியாக்கிய டிஏபி உரத்தை சேர்த்து விதைப்பு சட்டத்துக்குள் முக்கால் அளவுக்கு நிரப்ப வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட 3 கிலோ முளை கட்டிய விதையை 0.5 சதுர மீட்டர் சட்டத்துக்குள் 45 கிராம் என்ற அளவில் விதைத்து பின் மண்ணால் நன்கு மூடி விட வேண்டும். பின்னர் பூவாளியால் அடி வரை          (பாலித்தீன் விரிப்பு வரை) நனையும் அளவுக்கு தண்ணீர் தெளித்து சட்டத்தை வெளியில் எடுக்க வேண்டும். தென்னை ஓலை அல்லது வைக்கோலைக் கொண்டு விதைத்த பாத்திகளை மூடி 8 நாள் கழித்து எடுக்க வேண்டும். தொடர்ந்து, 5 நாள்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்த பின் பாத்திகள் நனையும் வகையில் வாய்க்காலில் தண்ணீர் கட்ட வேண்டும்
விதைத்த 9ஆம் நாளில் 0.5 சதம் யூரியா கரைசல் (150 கிராம் யூரியாவுக்கு 30 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில்) பூவாளி மூலம் மாலை வேளையில் தெளிக்க வேண்டும். சரியாக 14ஆவது நாளில் சிறிய சதுர சட்டத்துக்குள் உள்ள 12 முதல் 16 செ.மீ உயரமுடைய 2 இலை கொண்ட வாளிப்பான இளம் நாற்றுக்களை மெதுவாக அசைத்து பிரித்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு சென்று அங்கு நாற்றுக்களின் வேர் அறுபடாமல் எடுத்து குத்துக்கு ஒரு நாற்றாக வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 22.5 செ.மீ இடைவெளியில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும். இதற்கு கிராம வழக்கில் ஒற்றை நாற்று நடவு முறை என்று சொல்வதுண்டு என்றார்அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com