சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு பானஸ்வாடி ஆர்.எஸ்.பாளையா முனிசாமியப்பா சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில், பானஸ்வாடி போலீஸார் அங்கு சென்றனர்.
இதுதொடர்பாக குமார் (39), பாலு (28), முருகதாஸ் (35), கிரிதர் (53), வெங்கடேஷ் (49), கோபால் (40), கெளடா (24), சரவணா (39), முனிராஜ் (38), ஈஸ்வர் (53), லூயிஸ் (30), அஜீஸ் (28), ஜான் (30), நவீன் (29), ரவி (42), சுரேஷ் (33), ராஜு (45), அனீஷ் (35), சுரேஷ் (40), ஜெயகுமார் (32), சதீஷ் (48), விஜி (34), கன்டி (34), முரளி (49) உள்ளிட்ட 24 பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ. 2.37 லட்சம் ரொக்கப் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.