சிற்பக்கலை ஆய்வு உதவித்தொகையை பெற ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக சிற்பக்கலை அகாதெமி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகாதெமி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:-
கர்நாடக சிற்பக்கலை அகாதெமி சார்பில் சிற்பக் கலை சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படவிருக்கிறது.
இதற்காக சிற்பக் கலையில் சாதனை படைத்து சிற்பக்கலை தொடர்பாக ஆய்வுமேற்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிற்பக்கலை ஆராய்ச்சி 6 மாதங்களாக இருக்க வேண்டும். சிற்பக்கலை சார்ந்த எந்தத் தலைப்பிலும் ஆய்வுப்பணியை மேற்கொள்ளலாம். இது தொடர்பான ஆய்வுநோக்கை 4-5 பக்கங்களில் எழுதி, விண்ணப்பங்களை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 10 பேர், பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் என 15 பேர் ஆய்வுப் பணிக்கான உதவித்தொகை பெற நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதில் தேர்வானவர்களுக்கு மூன்று தவணைகளில் ரூ.1 லட்சம் உதவித்தொகையாக அளிக்கப்படும். விண்ணப்பங்களை www.karnatakashilpakalaacademy.org என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவாளர், கர்நாடக சிற்பக்கலை அகாதெமி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-2 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-22278725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.