மனைவி கொலை: கணவர் கைது

கோடாலியால் வெட்டி மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

கோடாலியால் வெட்டி மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தார்வாட் கரடிகுட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி லலிதா (40). திங்கள்கிழமை இரவு மது அருந்தி வீட்டிற்கு வந்த பசவராஜ், குடும்ப பிரச்னை காரணமாக லலிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பசவராஜ் வீட்டிலிருந்த கோடாரியால், லலிதாவை வெட்டினார். 
இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து லலிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து தார்வாட் ஊரக போலீஸார், பசவராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com