சாலை தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
பெங்களூரு சிக்கலசந்திராவைச் சேர்ந்தவர் புருஷோத்தம்நாயுடு (36). கட்டடத் தொழிலாளியான இவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். பனசங்கரி 6-வது ஸ்டேஜ் நைஸ்சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலைத்தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தம்நாயுடு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.