பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தல்: இரு அணிகள் வேட்புமனு தாக்கல்

பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தலில் போட்டியிட சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் ஒரு அணியினரும்

பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தலில் போட்டியிட சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் ஒரு அணியினரும்,  துணைத் தலைவர் கோ.தாமோதரன் தலைமையில் மற்றொரு அணியினரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழு,  செயற்குழுவுக்கான பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. 
இந்த வகையில், சங்கத்தின் 2018-20-ஆம் ஆண்டு பருவத்துக்கான தேர்தல் நவம்பர் 25-இல் நடக்கவிருக்கிறது.  இதற்கான வேட்புமனுதாக்கல் நவம்பர் 5-இல் தொடங்கியது. 13-ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையவிருக்கிறது. 
இந்த நிலையில், சங்கத்  தலைவர் தி.கோ.தாமோதரன், துணைத் தலைவர் கோ.தாமோதரன் ஆகிய இருவரும் தனித்தனியே அணிகளை அமைத்து தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 
தி.கோ.தாமோதரன் அணியில்..: தி.கோ.தாமோதரன் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களான(போட்டியிடும் பதவி அடைப்புக் குறிக்குள்) தி.கோ.தாமோதரன்(தலைவர்), அமுதபாண்டியன்(துணைத் தலைவர்), வா.ஸ்ரீதரன்(செயலர்), மு.சம்பத்(பொருளாளர்), வா.கோபிநாத், நா.மகிழ்நன், இராம.இளங்கோவன்,இல.பழனி(துணைச் செயலர்கள்),  மு.புண்ணியமூர்த்தி, சு.பாரி, கோபால்மணி, அ.து.மகேந்திரவர்மா, அ.இ.சரவணன், அ.ம.இரவிச்சந்திரன், முருகன்.ஜி, எம்.ரவி, சு.புவனேஸ்வரி(செயற்குழு உறுப்பினர்கள்)  ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.  தேர்தல் பொறுப்பாளர் புலவர் பத்மநாபனிடம் வேட்புமனுக்களை அளித்தனர். 
முன்னதாக, பெங்களூரு,அல்சூர் ஏரி எதிரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தி.கோ.தாமோதரன் தலைமையில் அனைவரும் மாலை அணிவித்துமரியாதை செலுத்தியபிறகு,அங்கிருந்து ஊர்வலமாக வந்துவேட்புமனுதாக்கல் செய்தனர்.
கோ.தாமோதரன் அணியில்...: இதனிடையே, கோ.தாமோதரன் அணியில் வேட்பாளர்களான(போட்டியிடும் பதவி அடைப்புக்குறிக்குள்)கோ.தாமோதரன்(தலைவர்), ஐ.இராசன்(துணைத்தலைவர்), எஸ்.இராமசுப்பிரமணியன்(செயலாளர்), சு.கோவிந்தராசன்(பொருளாளர்), பி.எஸ்.சுரேஷ்குமார், மணிகண்டன், இராமச்சந்திரன், ஆர்.எம்.பழனிச்சாமி(துணைச்செயலாளர்கள்), இராமசுப்பு, வெள்ளத்துரை, ஆர்.சண்முகம், எஸ்.எஸ்.தங்கம், ஆறுமுகம், சரவணக்குமார், பி.எஸ்.மணி, குகனேசுவரன், விஜயலடுச்மி, என்.சுந்தரேசன், கே.மாறன்(செயற்குழு உறுப்பினர்கள்)ஆகியோர் சனிக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 
இதனிடையே, மூன்றாவது அணி ஒன்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாகச் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com