வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிக்பள்ளாபூர் மாவட்டத்துக்குள்பட்ட சிந்தாமணி பிராமணர்பேட்டையைச் சேர்ந்த சுஜாதம்மா, பானிப் பூரி வியாபாரம் செய்து வந்தார்.
இவர் கடந்த 7-ஆம் தேதி கோலார் மாவட்டம் முள்பாகலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுவிட்டு, சனிக்கிழமை மாலை வீட்டிற்கு திரும்பினார். இதற்கிடையே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 65 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 80 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
புகாரின்பேரில் சிந்தாமணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.