வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிக்பள்ளாபூர் மாவட்டத்துக்குள்பட்ட சிந்தாமணி பிராமணர்பேட்டையைச் சேர்ந்த சுஜாதம்மா,  பானிப் பூரி வியாபாரம் செய்து வந்தார். 
இவர் கடந்த 7-ஆம் தேதி கோலார் மாவட்டம் முள்பாகலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுவிட்டு, சனிக்கிழமை மாலை வீட்டிற்கு திரும்பினார்.  இதற்கிடையே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 65 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 80 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். 
புகாரின்பேரில் சிந்தாமணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com