சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.1.22 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு பனசங்கரி 3-ஆவது ஸ்டேஜ் வீரபத்ரா நகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.22 லட்சம், 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பேட்டராயனபுரா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.