டேங்கர் லாரி மோதியதில் தம்பதி சாவு

டேங்கர் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில், கணவன்-மனைவி இறந்தனர்.
டேங்கர் லாரி மோதியதில் தம்பதி சாவு

டேங்கர் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில், கணவன்-மனைவி இறந்தனர்.
திருவேற்காடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ஆர்.குருநாதன் (56). இவரது மனைவி விஜயலட்சுமி (51). 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் ரெஜினாவுக்கு (26) திருமணமாகிவிட்டது. மகன் சீனிவாசன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், குருநாதனும், விஜயலட்சுமியும் நெற்குன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் இருவரும், அங்கு வசிக்கும் தங்களது உறவினர் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, நண்பகல் 1.45 மணிக்கு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டு, பூந்தமல்லி சாலையில் மதுரவாயலிடம் செல்லும்போது, பின்னால் கொருக்குப்பேட்டையில் இருந்து பூந்தமல்லி அரசு பேருந்து பணிமனைக்கு டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி முந்திச் செல்ல முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் மோதிக் கொண்டதில், மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். லாரியின் சக்கரங்கள் இருவர் மீதும் ஏறியதில், பலத்த காயமடைந்தனர். இதில், அவர்கள் அடுத்தடுத்து இறந்தனர்.
தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, தலைமறைவான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாக்கியராஜ் (28) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com