சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட கே.கே.நகர், முனுசாமி சாலை, அண்ணா பிரதான சாலைகளை இணைக்கும் ஏரிக்கரை இணைப்புச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நகராட்சி நிர்வாகம் - ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை (ஆக.11) திறந்து வைத்தார்.
கடந்த 2015 }ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை மணப்பாக்கம், போரூர், ராமாபுரம், கே.கே.நகர், மற்றும் அசோக் நகர் பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாலையில் மையத்தடுப்பு சுவர், மின்கம்பங்கள், நடைபாதை, மழைநீர் வடிகால் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய சாலை திறப்பு விழாவில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையாளர் எம்.கேவிந்தராவ், விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.