வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன், ரூ. 4.5 லட்சம் ரொக்கம் திருட்டு

திருக்கழுகுன்றம் அருகில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருக்கழுகுன்றம் அருகில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
திருக்கழுகுன்றம், மங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் பால்கனி. தனியார் மெட்ரிக். பள்ளியின் தாளாளராக உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு, வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள், துணிகள் சிதறிக் கிடந்தது தெரியவந்தது. பீரோவைப் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 4.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் பால்கனி அளித்த புகாரின்பேரில், மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்டு, காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com