சுவரில் துளை போட்டு டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு

சென்னை கோடம்பாக்கத்தில் சுவரில் துளை போட்டு டாஸ்மாக் மதுபானக் கடையில் ரூ.2 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் சுவரில் துளை போட்டு டாஸ்மாக் மதுபானக் கடையில் ரூ.2 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படுகிறது. இந்தக் கடை ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை கடையின் கண்காணிப்பாளர் மந்தைவெளி கிரீன்வேஸ் சாலைப் பகுதியைச் சேர்ந்த முரளி (43), கடையைத் திறக்க வந்தார்.
அவர் கடையைத் திறந்து உள்ளே சென்றபோது, கடையின் சுவரில் ஒரு ஆள் உள்ளே வரும் அளவுக்கு துளை போட்டு, பணப் பெட்டியில் இருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com