குறும்பட இயக்குநரை கடத்திய 5 பேர் கைது

குறும்பட இயக்குநரை கடத்திய 5 பேர் கைது

சென்னை அண்ணா நகரில் குறும்பட இயக்குநர் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா நகரில் குறும்பட இயக்குநர் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
 சென்னை அம்பத்தூர், மேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கேசவ் (29). குறும்பட இயக்குநர். இவர், சாலிகிராமம் பாரதி நகர், ராஜா தெருவைச் சேர்ந்த சங்கர் (26), அவரது நண்பர் மனோஜ்குமார் (26) ஆகியோரிடமிருந்து குறும்பட எடுப்பதற்காக இரு விலை உயர்ந்த கேமராக்களை சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்தாராம். அந்த கேமராக்கள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அதற்கான வாடகையையும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
 இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, அண்ணா நகர் 18 -ஆவது பிரதான சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் கேசவ் தனது நண்ருடன் அமர்ந்திருந்தாராம். அப்போது அங்கு வந்த சங்கர் தரப்பினர் அவரிடம் தகராறு செய்தனராம். தகராறு முற்றவே அக்கும்பல் கேசவை தாக்கி காரில் கடத்திச் சென்றது.
 இதுகுறித்து கேசவ் நண்பர் திருமங்கலம் போலீஸாருக்கு தகவல் அளித்தார். அதையடுத்து போலீஸார் அண்ணாநகர், கோயம்பேடு, வளசரவாக்கம் பகுதியில் உடனடியாக தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். சங்கர், கேசவ் ஆகியோரின் செல்லிடப்பேசி சிக்னல்களும் கண்காணிக்கப்பட்டன. போலீஸார் பின்தொடர்வதை அறிந்த அக்கும்பல் கேசவை கோயம்பேடு அருகே இறக்கிவிட்டு தப்பியது.
 இருப்பினும் போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட சங்கர், மனோஜ்குமார், அவரது நண்பர்களான வேலூரை சேர்ந்த தங்கராஜ் (28), திருப்பத்தூரை சேர்ந்த கௌதம் (25), குட்டி (எ) ஆகாஷ் (26) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com