மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுரையாளர் பணி: வாசன் கோரிக்கை

அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வான மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வான மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1,058 ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை மட்டும் நிறுத்தி வைத்தனர். 
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பால், தேர்ச்சி பெற்ற தகுதியான மாற்றுத்திறனாளிகள் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com