ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: இதுவரை ரூ.30 லட்சம் பறிமுதல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா நடைபெற்று வருவதாகத் தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை ரூ.30 லட்சத்து 29 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: இதுவரை ரூ.30 லட்சம் பறிமுதல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா நடைபெற்று வருவதாகத் தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை ரூ.30 லட்சத்து 29 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆர்.கே. நகரில் நடைபெற்ற பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை வரை ரூ.30.29 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 225 வாகனங்களுக்கும் 133 பொதுக் கூட்டங்களுக்கும், 496 பிரசார ஊர்வலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 120 பேர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com