போராட்டத்தில் பங்கேற்கமெரீனா கடற்கரைக்கு வருபவர்களின் முக்கியமான போக்குவரத்தாக பறக்கும் ரயில் சேவை விளங்கியது.
இந்தச் சேவையை வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.
ஆவடி, அம்பத்தூர், அரக்கோணம் போன்ற புறநகர் பகுதிகளில் இருந்து வருவோரும் இந்தச் சேவையை பெரிதும் பயன்படுத்தினர்.
வேளச்சேரி முதல் கடற்கரை வரையான ரயில் பாதையில் உள்ள ரயில் நிலையங்களான வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், அடையாறு இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், கோட்டூர்புரம், கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, மயிலாப்பூர், முண்டகக் கண்ணி அம்மன் கோவில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் இரு நாட்களாகவே பயணிகளின் கூட்டம் அலைமோதியது.