சாலை விபத்துகளை தடுக்க வாகன சோதனை: 1151 வழக்குகள் பதிவு

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் சென்னையில் கடந்த வெள்ளி, சனி ஆகிய நாள்களில் போலீஸார் நடத்திய சோதனையில் 1,151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் சென்னையில் கடந்த வெள்ளி, சனி ஆகிய நாள்களில் போலீஸார் நடத்திய சோதனையில் 1,151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை மாநகரில் தினமும் ஏற்பட்டு வரும் விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜூலை 21, 22 ஆகிய இரு நாள்களிலும் நகரின் 65 முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 256 வழக்குகள், வேகமாக வாகனத்தை ஓட்டியதாக 159 வழக்குகள், கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டியதாக 19 வழக்குகள், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததாக 36 வழக்குகள், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 517 வழக்குகள், பிற வழக்குகள் 16 என மொத்தம் 1,151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com