முகநூல் காதல்: சகோதரிகளுக்கு கத்திக் குத்து

சென்னையில் முகநூல் மூலம் ஒருதலையாகக் காதலித்த விவகாரத்தில், சகோதரிகளைக் கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் முகநூல் மூலம் ஒருதலையாகக் காதலித்த விவகாரத்தில், சகோதரிகளைக் கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் சபியுல்லா (28). இவருக்கு ராயப்பேட்டை முகமது காசிம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த ஒரு பெண், முகநூல் மூலம் சில மாதங்களுக்கு முன் அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் முகநூலில் அடிக்கடி பேசினர். நாளடைவில் அந்தப் பெண்ணை சபியுல்லா ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கினாராம். ஆனால் அந்தப் பெண் சபியுல்லாவை காதலிக்கவில்லை என கூறப்படுகிறது.
தன்னைக் காதலிக்கும்படி அந்தப் பெண்ணை சபியுல்லா வற்புறுத்தினாராம். அந்தப் பெண்ணைச் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற சபியுல்லா நேரில் வருமாறு அழைத்தாராம்.
இதனால் அப்பெண் சபியுல்லாவைக் கண்டித்தாராம். அப்போது கத்தியால் அந்தப் பெண்ணை சபியுல்லா குத்தினாராம். அந்தப் பெண் போட்ட சத்தத்தை அடுத்து அங்கு வந்த அப்பெண்ணின் சகோதரியையும் சபியுல்லா கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோட முயன்றாராம். அந்தப் பகுதி மக்கள் சபியுல்லாவைப் பிடித்து ராயப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த சகோதரிகளை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சபியுல்லாவைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com