இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஞாயிறு

சென்னையில் காவல்துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.இது குறித்த விவரம்:

சென்னையில் காவல்துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது குறித்த விவரம்:
சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஞாயிறு நடத்தப்படுகிறது.
இதையொட்டி,போலீஸார் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்துகின்றனர். இதை முன்னிட்டு,வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விபத்துக்களுக்கு காரணமாகவோ அல்லது பாதிப்பு உள்ளானர்களாவோ இருக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள்,அனைத்து சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது,வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசக் கூடாது, இரு சக்ககர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டக் கூடாது, சிறார்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் வாகனங்களை ஓட்டக் கூடாது என 10 அறிவுரைகளை பின்பற்றுமாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com