ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.பைரவன்(வயது 92) சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) காலமானார்.
அவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
நீதிபதி பைரவன் கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் சேலம் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியவர். சென்னை பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றி உள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை(மார்ச் 27) பிற்பகல் 2 மணியளவில் பெசன்ட்நகர் மயானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு... 97900 39921.