பாதுகாப்புத் துறையில் தனியார்மயம்: திட்டத்தை கைவிட கையெழுத்து இயக்கம்

தேசத்தின் நலன் கருதி பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

தேசத்தின் நலன் கருதி பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்த சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசத்தின் நலன் கருதி பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஏப்ரல் 3 -ஆம் தேதி முதல் 27 - ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.
மேலும் புதிய ஓய்வுதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 7 -ஆவது ஊதியக் குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், ஊழியர்களுக்கான படிகளை மாற்றியமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை மாதம் 3 -ஆம் தேதி, 4 லட்சம் ஊழியர்கள் நாடாளுமன்றம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என அதில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com