தேசத்தின் நலன் கருதி பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்த சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசத்தின் நலன் கருதி பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஏப்ரல் 3 -ஆம் தேதி முதல் 27 - ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.
மேலும் புதிய ஓய்வுதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 7 -ஆவது ஊதியக் குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், ஊழியர்களுக்கான படிகளை மாற்றியமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை மாதம் 3 -ஆம் தேதி, 4 லட்சம் ஊழியர்கள் நாடாளுமன்றம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என அதில் தெரிவித்துள்ளது.