தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 842 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி லிங்கலா சிரிஷா 500-க்கு 497 மதிப்பெண் பெற்றுள்ளார். மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி க.சேல்விழியும் 500-க்கு 497 மதிப்பெண் பெற்றுள்ளார்.
செம்பாக்கம் சீயோன் பள்ளி மாணவி ஐ.பெல்வினா பால் 500க்கு 494 மதிப்பெண் பெற்றுள்ளார்.
எஸ்.சி.எஸ். மெட்ரிக் பள்ளி: குரோம்பேட்டை எஸ்.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 84 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பேபி சரோஜா, செயலர் சந்தானம், தாளாளர் கிருஷ்சந்தானம் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.