சேலையூர் சீயோன் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 842 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 497 மதிப்பெண் பெற்ற சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் க.சேல்விழி, லிங்கலா சிரிஷாவுடன் பள்ளித் தாளாளர் என்.விஜயன் உள்ளிட்டோர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 497 மதிப்பெண் பெற்ற சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் க.சேல்விழி, லிங்கலா சிரிஷாவுடன் பள்ளித் தாளாளர் என்.விஜயன் உள்ளிட்டோர்.

தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 842 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி லிங்கலா சிரிஷா 500-க்கு 497 மதிப்பெண் பெற்றுள்ளார். மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி க.சேல்விழியும் 500-க்கு 497 மதிப்பெண் பெற்றுள்ளார்.
செம்பாக்கம் சீயோன் பள்ளி மாணவி ஐ.பெல்வினா பால் 500க்கு 494 மதிப்பெண் பெற்றுள்ளார்.
எஸ்.சி.எஸ். மெட்ரிக் பள்ளி: குரோம்பேட்டை எஸ்.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 84 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பேபி சரோஜா, செயலர் சந்தானம், தாளாளர் கிருஷ்சந்தானம் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com