தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (நவ.10) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
காய்ச்சல் காரணமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ராயப்பேட்டை அரசு ருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்த மு.க.ஸ்டாலின், அங்கு குமரி அனந்தனிடம் நலம் விசாரித்தார். விரைவில் நலம் பெற்று அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் குமரி அனந்தனிடம் நலம் விசாரித்தனர்.
பாரதமாதாவுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி குமரி அனந்தன், சென்னையிலிருந்து தருமபுரி வரை நடைப் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன் பின் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் நலம் விசாரிப்பு: தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், குமரி அனந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.