நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பு, நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள க.சண்முகம், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பானது, நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள ராஜீவ் ரஞ்சனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சண்முகம், உடல் நலம் பெற்றுத் திரும்பும் வரை, ராஜீவ் ரஞ்சனே நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.