பருவமழை பாதிப்புகள்: முதல்வர் இன்று ஆலோசனை

பருவ மழை பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில்
பருவமழை பாதிப்புகள்: முதல்வர் இன்று ஆலோசனை

பருவ மழை பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
 தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அனைத்துத் துறை செயலாளர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
 பருவமழை தீவிரம் அடையும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com