பராமரிப்புப் பணி காரணமாக மறைமலைநகர் பகுதியில் புதன்கிழமை (நவ.15) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், அன்றைய தினம் மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், சிங்கபெருமாள்கோயில், செங்குன்றம், மல்ரோஜாபுரம், கோவிந்தாபுரம், சட்டமங்கலம், கூடுவாஞ்சேரி டவுன், பெருமாட்டுநல்லூர், காயாரம்பேடு, நந்திவரம், மகாலஷ்மி நகர், கோவிந்தராஜபுரம், மாடம்பாக்கம், தைலாவரம், ஊரப்பாக்கம், ஆதனூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் இராது. இத்தகவலை மின்வாரிய அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.