சென்னை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும பொதுக் கணக்குப் பிரிவில் பணிபுரிந்த ஜி. செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில், சென்னை கிளை பொதுக் கணக்குப் பிரிவில், கடந்த 34 ஆண்டுகளாக எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் பணி ஓய்வு பெறுவதையொட்டி பிரிவு உபசார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர், முதுநிலை உற்பத்தி மேலாளர், ஊழியர்கள் பங்கேற்று செளந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.