போலீஸ் வாகன கண்ணாடி உடைப்பு: இளைஞர் கைது

தியாகராய நகரில் காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தியாகராய நகரில் காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே போலீஸார் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர், ரோந்து வாகனம் மீது கற்களை வீசினார். இதில் வாகனத்தின் இரு கண்ணாடிகள் உடைந்தன. உடனே அங்கிருந்து தப்பியோடிய அந்த நபரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர், திருவல்லிக்கேணி நடேசன் சாலைப் பகுதியைச் சேர்ந்த சு.கார்த்திக் (27) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். கார்த்திக், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com