சென்னை கோடம்பாக்கம்-பல்லாவரம் இடையே பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) நடைபெறுவதால், அன்று ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்தாகும் மின்சார ரயில்கள்:
சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு காலை 9.12, 9.25, 9.42, 10.00, 10.20, 10.40, 10.45, 10.50, முற்பகல் 11.10, 11.20, 11.40, 11.50, பகல் 12.10, 12.20, 12.40, 12.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு காலை 9.50, 10.00, 10.20, 10.40, 10.50, முற்பகல் 11.10, 11.20, 11.50, நண்பகல் 12, பகல் 12.50, 1.15, 1.30, 2.00, பிற்பகல் 2.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்தாகின்றன.
சென்னை கடற்கரை-தாம்பரம் வரை விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:
சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு காலை 10.30, முற்பகல் 11.30, நண்பகல் 1.00 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 9.35, காலை 10.15, முற்பகல் 11.00, பகல் 12, 12.30, 1.15, மதியம் 1.45 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை-திருமால்பூருக்கு காலை 9.50, நண்பகல் 1.30 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில்கள் திட்டமிடப்பட்ட அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.
தாம்பரம்-சென்னை கடற்கரை வரை விரைவு பாதையில் இயக்கப் படும் ரயில்கள்:
தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு காலை 10.10, முற்பகல் 11.00, 11.30, பகல் 12.10 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும்.
திருமால்பூர்-சென்னை கடற்கரைக்கு காலை 8.00, 10.25 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும்.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 9.40, 10.50, முற்பகல் 11.50, பகல் 12.15, 1.00 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில்கள் திட்டமிடப்பட்ட அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.