பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரும்பாக்கம் இந்து மயான பூமியில் உடல் தகன இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதை அடுத்து பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை ( ஜூன் 16) முதல் வரும் 30-ஆம் தேதி வரை தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநராட்சி ஆணையர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-8 க்கு உள்பட்ட அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்து மயான பூமியில் உடல் தகன இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்யும் பொருட்டு சனிக்கிழமை (ஜூன்16) முதல் இம்மாதம் 30-ஆம் தேதி வரை அந்த மயானம் தற்காலிகமாகச் செயல்படாது. மேலும், பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அருகிலுள்ள அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு, நுங்கம்பாக்கம் இந்து மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.