அரும்பாக்கம் இந்து மயானம் 30-ஆம் தேதி வரை இயங்காது

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரும்பாக்கம் இந்து மயான பூமியில் உடல் தகன இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதை அடுத்து பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை ( ஜூன் 16) முதல் வரும் 30-ஆம் தேதி வரை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரும்பாக்கம் இந்து மயான பூமியில் உடல் தகன இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதை அடுத்து பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை ( ஜூன் 16) முதல் வரும் 30-ஆம் தேதி வரை தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநராட்சி ஆணையர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-8 க்கு உள்பட்ட அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்து மயான பூமியில் உடல் தகன இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்யும் பொருட்டு சனிக்கிழமை (ஜூன்16) முதல் இம்மாதம் 30-ஆம் தேதி வரை அந்த மயானம் தற்காலிகமாகச் செயல்படாது. மேலும், பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அருகிலுள்ள அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு, நுங்கம்பாக்கம் இந்து மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com