தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) குறைதீர் கூட்டம் நுங்கம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.
தொழிலாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பயனாளிகளுக்காக குறைதீர் கூட்டம் இஎஸ்ஐ கார்ப்பரேஷன், மண்டல அலுவலகம், ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கத்தில் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை அனைத்துப் பயனாளிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழக துணை இயக்குநர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.