அஞ்சல்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் வரும் 23-ஆம் தேதி எத்திராஜ் சாலை அஞ்சல் அலுவலகத்திலும், 27-ஆம் தேதி அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.
எத்திராஜ் சாலை: அஞ்சல் துறையின் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் மார்ச் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு அஞ்சல்குறை தீர் கூட்டம் புது எண்-5, பழைய எண்-3, நான்காவது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை - 600 008-ல் உள்ள அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. சென்னை வடகோட்டத்துக்குட்பட்ட அஞ்சல்துறை சேவை சம்பந்தமான தங்களது குறைகளை வாடிக்கையாளர்கள் கடிதம் வாயிலாக வியாழக்கிழமைக்குள் (மார்ச் 15) இவ்வலுவலகத்துக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.
அண்ணா சாலை: வரும் 27-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெறும். சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள், குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் அதன் விவரங்களை முதன்மை அஞ்சல் தலைவர் அலோக் ஓஜா, சென்னை பொது அஞ்சலகம், சென்னை 600 001 என்ற முகவரிக்கு மார்ச் 23 தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.