மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காவலர் சாவு

சென்னை ராஜாஜி சாலையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த காவலர் உயிரிழந்தார்.

சென்னை ராஜாஜி சாலையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த காவலர் உயிரிழந்தார்.
 தண்டையார்பேட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் ஆ.தேஸ்குமார் (40). இவர் பெரியமேடு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
 இந்நிலையில் தேஸ்குமார், கடந்த 8-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்ததும் அவர், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
 அவர் ராஜாஜி சாலை கடற்கரை அதிகாரிகள் உணவு விடுதி அருகே செல்லும்போது, எதிரே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தேஸ்குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தேஸ்குமார் திங்கள்கிழமை அதிகாலை இறந்தார்.
 இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தேஸ்குமாருக்கு நிர்மலா என்ற மனைவியும், 8 வயதில் வித்யாஸ்ரீ என்ற மகளும், 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
 கூடுதல் ஆணையர் அஞ்சலி: தேஸ்குமார் உடலுக்கு பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com