ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு விழா

மகாலிங்கபுரம் ஸ்ரீஐயப்பன் ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு திருவிழா வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.


மகாலிங்கபுரம் ஸ்ரீஐயப்பன் ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு திருவிழா வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 4 மணியளவில் பரத நாட்டியம், குச்சுப்புடி நடனம், பக்திப் பாடல்கள், கர்நாடக இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரி, பஜனை ஆகியன நடைபெறவுள்ளன. வரும் டிசம்பர் 26-இல் கே.ஜே.ஜேசுதாஸ் 47-ஆவது ஆண்டாக பாடுகிறார்.
வரும் சனிக்கிழமை தொடங்கும் இசைக் கச்சேரியில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா குழுவினரின் பக்தி இசை பாடல்கள் இடம்பெறுகின்றன. பதினெட்டாம் தேதி கோயில் ஊழியர்களின் பக்தி இசை பாடல்கள் நடைபெற உள்ளன. 19-இல் சுனந்தா ராம்தாஸ் இசைக் கச்சேரியும், பிரபல கர்நாடக இசைக் கலைஞர் உன்னிகிருஷ்ணன் கர்நாடக இசையும், கலாஷேத்ரா மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சிகளும், கர்நாடக இசைக் கச்சேரியும் இடம்பெறுகின்றன. மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி பக்தர்களுக்கு தேவையான துளசி மாலை, வேஷ்டி, துண்டு, இருமுடி கட்டுவதற்கான அனைத்து பணிகளையும் ஐயப்ப பக்த சபை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரத்தில்...: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் மண்டல பூஜை சனிக்கிழமை முதல் நடைபெறுகிறது. இப்பூஜை வரும் டிசம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மண்டல பூஜையையொட்டி, வரும் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை 27 நாள்கள் சிறப்பு லட்சார்ச்சனை நடைபெறும். டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. மண்டல பூஜை காலத்தில் தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 
மண்டல பூஜை காலத்தில் காலை 5 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். இத்தகவலை இராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு ஐயப்ப சுவாமி ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com