கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினரின் செல்லிடப்பேசி திருடப்பட்டது.
வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு. இவர் பணி நிமித்தமாக கோவையில் இருந்து நீலகிரி விரைவு ரயிலில் புதன்கிழமை இரவு புறப்பட்டார். இந்த ரயில் வியாழக்கிழமை பெரம்பூர் அருகே வந்தது. அவர் தனது செல்லிடப்பேசியை சார்ஜ் செய்வதற்காக ஃபிளக்கில் சொருகி வைத்திருந்தாராம். ரயில் சென்ட்ரல் ரயில்நிலையத்தை வந்தடைந்தபோது செல்லிடப்பேசியைக் காணவில்லை. சென்ட்ரல் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் தாமஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.