வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம ஊழியர்களை தரக்குறைவாக பேசும் அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம ஊழியர்களை தரக்குறைவாக பேசும் அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இச்சங்கத்தின் வட்டாரத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். செயலாளர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்து, ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் ஆகியோர் அங்குள்ள கிராம ஊழியர்களை தரைக் குறைவாக பேசியுள்ளனர். அவர்கள் மீது ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகிகள் கண்ணன், கன்னியாகுமாரி, அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com