ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்கத்தினர் பொன்னேரியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மலையப்பன் தலைமை வகித்தார். அறிவுமதி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஜிஎஸ்டி காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது குறித்து ஆனந்தன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.