வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை திருட்டு

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 23 பவுன் நகைகளை திருடிச் சென் மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு நடைபெற்ற வீட்டில், மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பீரோ.
திருட்டு நடைபெற்ற வீட்டில், மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பீரோ.

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 23 பவுன் நகைகளை திருடிச் சென் மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் காவல் எல்லைக்கு உள்பட்ட போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமகுமார் (40). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஹேமகுமார் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர், மாலையில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கிரில் கேட்டின் பூட்டும், உள்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து ஹேமகுமார் அளித்த புகாரின் பேரில் மணவாள நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com