திமுக சார்பில் குளம் சீரமைக்கும் பணிகளை திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கி.வேணு திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், எஸ்.வி.ஜி. புரம் பூரகமரக் குளம் சீரமைக்கும் பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்ற பணிகளை திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு தொடங்கி வைத்தார்.
விழாவில் திருத்தணி நகரச் செயலாளர் பூபதி, பொதுக் குழு உறுப்பினர் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.