திருவள்ளூர் அருகே நரசிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தின் முக்கிய அம்சமான கருட சேவை திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் 17-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணியளவில் உற்சவர் நரசிம்ம பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்நது 21-ஆம் தேதி பல்லக்கு உற்சவமும், 23-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 25-ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு ஆண்டாள் சந்நிதியில் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது.