நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை

திருவள்ளூர் அருகே நரசிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தின் முக்கிய அம்சமான கருட சேவை திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே நரசிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தின் முக்கிய அம்சமான கருட சேவை திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் 17-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணியளவில் உற்சவர் நரசிம்ம பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 இதைத் தொடர்நது 21-ஆம் தேதி பல்லக்கு உற்சவமும், 23-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 25-ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு ஆண்டாள் சந்நிதியில் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com