வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, பணம் திருட்டு

திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து, 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்

திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து, 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆர்.கே.பேட்டையை அடுத்த வீராணத்தூரைச் சேர்ந்தவர் ஏழுமலை (45). இவரது மனைவி சரோஜா. இவர்கள் திங்கள்கிழமை வழக்கம்போல், வேலைக்கு சென்றனர். மதியம், சரோஜா வீட்டுக்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆர்.கே.பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com