திருமுல்லைவாயலில் ஆசிரியையிடம் 8 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனி ஆதிசங்கரர் சாலையைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ரேவதி(43) முத்தாப்புதுப்பேட்டையிலுள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர், வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு பள்ளிக்குச் செல்வதற்காக, திருமுல்லைவாயல் ரயில்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கரவாகனத்தில் எதிரே வந்த இருவரில், ஒருவர் ரேவதியின் கழுத்திலிருந்த 8 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, தயாராக இருந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார். இதுகுறித்து, திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.