அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கியவர் இறந்தார்.
அயப்பாக்கம், ஜெயராமன் நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி (40) இவர் சனிக்கிழமை அம்பத்தூரிலிருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டி ருந்தார்.
அப்போது, அயப்பாக்கத்திலிருந்து திருவேற்காடு நோக்கி தனியாருக்குச் சொந்தமான தண்ணீர் லாரி முன்னே சென்று கொண்டிருந்தது.
மழையினால், சாலையிலுள்ள மேடு,பள்ளத்தில் செல்ல முடியாமல் சிவமூர்த்தியின் பைக் இடறி விழுந்து, லாரியின் பின்சக்கரத்தில் அவர் சிக்கினார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவமூர்த்தி இறந்தார். இதையடுத்து, லாரி ஓட்டுநர் சஞ்சய் காந்தியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.