இளைஞர் தற்கொலை

ஆவடியில் ஒருதலை காதலால் விரக்தியில் இருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடியில் ஒருதலை காதலால் விரக்தியில் இருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி கவரப்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகன் அருள்ராஜ் (29). இவர், கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் பணியாற்றினார். அப்போது, அங்கு ஒரு பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த பெண் அருள்ராஜின் காதலை ஏற்காததால், வெள்ளிக்கிழமை காலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெளியே சென்றிருந்த அருள்ராஜின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆவடி காவல் ஆய்வாளர் கர்ணன் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com