சாலை பகுப்பானில் மோதி விபத்து: அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

பெரியபாளையம் பகுதியில் சாலை பகுப்பான் மீது மோதியதில் அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாலை பகுப்பானில் மோதி விபத்து: அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

பெரியபாளையம் பகுதியில் சாலை பகுப்பான் மீது மோதியதில் அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஊத்துக்கோட்டையில் இருந்து பெரியபாளையம் வழியாக வடமதுரை பகுதிக்கு அரிசி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மூர்த்தி (35), ஓட்டி வந்தார். பெரியபாளையம் பகுதியில் வந்தபோது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலைப்பகுப்பானில் மோதி, கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மூர்த்தி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த 100 மூட்டை அரிசியும் சாலையில் விழுந்து, மழைநீரில் நனைந்து நாசமாயின.
இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீஸார் அங்கு சென்று, கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால், திருப்பதி-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com