அங்கன்வாடி பணி: அக்.5 முதல் நேர்முகத் தேர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 825 அங்கன்வாடி பணியாளர்கள், 42 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 671 அங்கன்வாடி உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நேரடியாக நிரப்பப் பட உள்ளது.
இதற்கான நேர்காணல் வரும் 5-ஆம் தேதி தொடங்கி, 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
எனவே, இப்பணிக்கு கடந்த 18.8.2017 வரை விண்ணப்பித்தவர்கள் நேர்காணலில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதில் பங்கேற்போர், மதிப்பெண் பட்டியல், பள்ளி இறுதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, கணவரால் கைவிடப்பட்டோர் சான்று, மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, ஆண் வாரிசு இல்லாதச் சான்று, குடும்பத்தில் யாரேனும் மாற்றுத் திறனாளி எனில் அதற்கான அடையாள அட்டை ஆகிய சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com