வல்லூர் அனல் மின் நிலையத்தில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீஞ்சூர் அருகே வல்லூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள 3 அலகுகளில், மொத்தம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனல் மின் நிலையத்தில் இருந்த, மின் உற்பத்தி செய்யப்படும் இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் திருடு போனது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து, அனல் மின் நிலைய கிடங்கு மேலாளர் மல்லிகாஅர்ஜுனா, மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
24 மணி நேரமும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் இருக்கும் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்கள் எவ்வாறு திருடுபோனது என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.