தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில், சென்னை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பாராட்டு விழா மாதவரத்தில் திங்கள்கிழமை

தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில், சென்னை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பாராட்டு விழா மாதவரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, மாநில பிரசாரக் குழு தலைவர் சங்கர் தலைமை வகித்தார். 
மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.சசிகுமார் ஆண்டறிக்கையை வாசித்தார். மாநில துணைத் தலைவர் செல்வராஜ் தொடக்க உரையாற்றினார். 
விழாவுக்கு, மின்கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி, முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். 
இதில் அமைப்பின் நிர்வாகிகள் சங்கர், அருள், சீனு, மெய்ஞானமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com