திருத்தணியில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் திருத்தணி அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில், காவல் துறையினர் நடத்திய இந்நிகழ்ச்சிக்கு ஆய்வாளர் விநாயகம் தலைமை வகித்தார்.
இதில், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் காவல்
துறையினர் குடும்பத்தினர் ஆகியோர் இடையே, ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன், பந்து எறிதல், உறியடித்தல், ஊசிநூல் கோர்த்தல், கோலப் போட்டி உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைக் கண்காணிப்பாளர் பாலசந்திரன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், மது விலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் பாலாஜி, திருவாலங்காடு ஆய்வாளர் சர்தார், உதவி ஆய்வாளர் சுரேந்தர், கல்லூரி உடற்கல்வி பேராசிரியர் முனைவர் ராஜேஷ்கார்த்திக், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெய்லாவூதீன், தேசிய மாணவர் படை பேராசிரியர் ஹேமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.