திமுக சார்பில் 500 பேருக்கு நல உதவிகள்

புதுப்பாளையத்தில் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுப்பாளையம், காரணி, நெல்வாய், எருக்குவாய்,

புதுப்பாளையத்தில் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுப்பாளையம், காரணி, நெல்வாய், எருக்குவாய், மங்களம், பாலவாக்கம் ஊராட்சி திமுக சார்பில் புதுப்பாளையம் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் வரவேற்றார். கூட்டத்திற்கு மாவட்டப் பிரதிநிதி எம்.ஆர்.ஸ்ரீதர், விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.எஸ்.மூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் இஸ்ரவேல், முத்துசாமி, பரத்குமார் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் திமுக மாநில இலக்கிய அணி பிரவலர் கவிஞர் கா.வேழவேந்தன், தலைமை நிலைய கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி, தலைமை நிலையப் பேச்சாளர்கள் ஆரணி மாலா, தமிழ் சாதிக், முரசொலி செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் 500 ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை புதுப்பாளையம், காரணி, நெல்வாய், எருக்குவாய், மங்களம், பாலவாக்கம் ஊராட்சி திமுக நிர்வாகிகள், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com